×

பட்டா கத்தியால் கேக் வெட்டிய இந்து எழுச்சி பேரவை மாவட்ட தலைவர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயிலை சேர்ந்தவர் பஞ்சநாதன் மகன் சாய்ரகு (39). இந்து எழுச்சி பேரவையில் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட தலைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த 24ம்தேதி சாய்ரகு பிறந்தநாள் தஞ்சாவூர்- நாகப்பட்டினம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மிக விமர்சையாக கொண்டாப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர். அப்போது பிறந்தநாளுக்காக நண்பர்கள் வாங்கி வந்த கேக்கை, சாய்ரகு அவரது நண்பர்களுடன் சேர்ந்து பட்டா கத்தியில் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தகவலறிந்த தஞ்சாவூர் தாலுகா போலீசார் கட்சி அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார், ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சாய்ரகுவை நேற்று அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post பட்டா கத்தியால் கேக் வெட்டிய இந்து எழுச்சி பேரவை மாவட்ட தலைவர் கைது appeared first on Dinakaran.

Tags : president ,Hindu Esurrection Council ,Thanjavur ,Sairaku ,Panchanathan ,Mariamman temple ,Hindu Esurrection Council district ,
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!